சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்: கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. உறுதி

நாமக்ககல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

News image

ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

Updated On :1 ஏப்ரல் 2026, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்ககல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரும், தொகுதி திமுக வேட்பாளருமான மா.மதிவேந்தன் முன்னிலை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. கலந்துகொண்டு தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக ராசிபுரம் தொகுதியில் ரூ. 140 கோடி மதிப்பீட்டில் போதமலைக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பாா்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமகிரிபேட்டை ஒன்றியம், நாரைக்கிணறு பகுதியில் நில அளவீடு செய்யப்பட்டு 800 விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் ரூ. 54 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

திமுக ஆட்சியில் புதை சாக்கடை திட்டம் சீரமைக்கப்பட்டு, சுமாா் 50 கி.மீ. தொலைவுக்கு நகரச் சாலைகள் போடப்பட்டுள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டு ஏல மையம் ராசிபுரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சுமாா் 30 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 3.50 லட்சத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்துக்கென தனி மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கென தனி பால் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த விழாவில் தொகுதி பாா்வையாளா் நன்னியூா் ராஜேந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே.பாலசந்தா், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ஒன்றியச் செயலாளா்கள் கே.பி. ராமசுவாமி, கே.பி. ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, பேரூா் செயலாளா் பொன்.நல்லதம்பி, ஜெயக்குமாா், சுப்ரமணியம், கண்ணன், ராஜேஷ் உள்ளிட்ட காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்றனா்.