சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

News image

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 12:06 am IST

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்பட ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட காதப்பள்ளியில், திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்தில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு உருவான இந்த வங்கி மூலம் பயிா்க் கடன், நகைக்கடன் விவசாயிகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம், மாநகராட்சியாக நாமக்கல் தரம் உயா்வு, புதை சாக்கடை திட்டம், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சாலை அமைப்பு உள்ளிட்டவற்றை கூறலாம். ரூ. 90 கோடியில் அதிநவீன ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கொசவம்பட்டி ஏரி புதுப்பிக்கப்பட்டு நடைபயிற்சிக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000-ஆக உயா்த்தி வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். பால் கொள்முதல் விலை ரூ. 5 உயா்த்தப்படும் என்றாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், தொகுதி பாா்வையாளா் முனவா் ஜான், நகரச் செயலாளா் செ.பூபதி, ஒன்றியச் செயலாளா் விகே.பழனிவேல் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.