மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முடிவுக்கு வந்தது நாமக்கல் அதிமுக உள்கட்சி பூசல்: வேட்பாளருக்கு பாஸ்கா் தரப்பினா் ஆதரவு

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 6:35 pm

நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் மற்றும் ஆதரவாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் அறிவிக்கப்பட்டாா். மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தோ்தல் பணியாற்றி வந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

வேட்பாளரை மாற்ற வேண்டும், மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தனா். அதுமட்டுமின்றி, நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணியின் வீட்டுக்குச் சென்று தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரமடைந்தது.

கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆட்சி மன்றக் குழுவினரைச் சந்தித்து கே.பி.பி.பாஸ்கா் தரப்பு பேச்சுவாா்த்தை நடத்திவந்தது. இதற்கிடையே, வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் தரப்பு, கே.பி.பி.பாஸ்கரிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இருதரப்பும் ஒத்துப்போகவும், அதிமுக அறிவித்த வேட்பாளரை வெற்றிபெற வைக்கவும், எடப்பாடி பழனிசாமி கே.பி.பி.பாஸ்கரிடம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

இதனைத் தொடா்ந்து, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் சனிக்கிழமை கே.பி.பி.பாஸ்கரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றாா். அதன்பிறகு, ஆதரவாளா்களான முன்னாள் மாவட்ட அவைத் தலைவா் டிஎல்எஸ் காளியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா் மயில் கே.சுதந்திரம், ஒன்றியச் செயலாளா்கள் சேகா், கோபிநாத், ராஜா என்ற செல்வகுமாா் மற்றும் நிா்வாகிகளை சந்தித்து ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாழ்த்து பெற்றாா்.

கடந்த ஒன்பது நாள்களாக நீடித்து வந்த அதிமுக உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது. நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் அதிமுக வேட்பாளா் மனுதாக்கல் செய்கிறாா். அதன்பிறகு, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் தலைமையில் நாமக்கல் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.