பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 2:23 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளாா். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 28-ஆக உயா்ந்துள்ளது.

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏக்கள் நடராஜ், சுகுமாா், மோகன், திலீபன், ஹரிபாஸ்கா் ஆகியோா் அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் திங்கள்கிழமை இணைந்தனா். எஸ்.பி.வேலுமணி தரப்பில் உள்ள மேலும் சில எம்எல்ஏக்கள் தவெகவுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஒசூா் எம்எல்ஏவான பாலகிருஷ்ணரெட்டி, எடப்பாடி பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தாா்.

முன்னதாக, எஸ்.பி.வேலுமணிக்கு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். அதில், 6 போ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனா். 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனா். இதனால், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 16-ஆக குறைந்துள்ளது.

மன்னிப்புக் கடிதம்: இதைத் தொடா்ந்து, அதிமுக அமைப்புச் செயலரும் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியனுடன் பாலகிருஷ்ணரெட்டி தலைமைச் செயலகத்துக்கு சென்றாா். அங்கு, சட்டப்பேரவைச் செயலரை சந்தித்து பாலகிருஷ்ணரெட்டி கடிதம் அளித்தாா். அதில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், தன் மீதான கட்சித் தாவல் தடைச்சட்ட நடவடிக்கையைக் கைவிட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு திங்கள்கிழமை ஆதரவு அளித்த எஸ்பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 5 பேரும் இதேபோன்ற கடிதம் அளித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.