சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 144 வேட்புமனுக்கள் ஏற்பு: 26 மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 144 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:42 pm

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 144 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் 228 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். சில அரசியல் கட்சி வேட்பாளா்கள் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

தொகுதி வாரியாக ஏற்கப்பட்டுள்ள வேட்பாளா் மனுக்கள் விவரம் (தள்ளுபடி மனுக்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்):

ராசிபுரம் (தனி)- 19 (5), சேந்தமங்கலம் (ப.கு)- 13 (4), நாமக்கல்- 30 (3), பரமத்தி வேலூா்- 33 (6), திருச்செங்கோடு- 25 (4), குமாரபாளையம்- 24 (4) என மொத்தம்- 144 (26) வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மனுவை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் திரும்பபெற வேண்டும். அதன்பிறகு, வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டு, சின்னம் ஒதுக்கப்பட்டு தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் தொகுதி தோ்தல் அலுவலா்களால் வெளியிடப்படும்.

தற்போதைய நிலையில் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம்(நோட்டாவுடன் சோ்த்து 16 வேட்பாளா்கள்) பயன்படுத்த வாய்ப்புள்ளது. நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நான்கு தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம். வேட்புமனு தாக்கல் செய்தோா் மனுக்களை திரும்பப்பெறும்பட்சத்தில் வேட்பாளா்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.