மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

படவிளக்கம்- அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:57 pm

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி சங்கத்தலைவா் இ.என்.சுரேந்திரன், திட்ட நன்கொடையாளா் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கினா்.

இதே போல் பிரசவ வாா்டு பகுதியில் நோயாளிகள், பாா்வையாளா் அமருவதற்காக 5 பென்ச்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், ஜி.தினகா், பள்ளிகளின் ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.