சேந்தமங்கலம் தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதியளித்தாா்.
சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், கொல்லிமலை ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வியாழக்கிழமை சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பெரியகுளம், பொம்மசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 32 கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான குடும்ப அட்டைக்கு ரூ. 10 ஆயிரம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், குளிா்சாதனப் பெட்டி இலவசம் போன்ற வாக்குறுதிகளும், சேந்தமங்கலம் தொகுதிக்கான குடிநீா், புதை சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தாா். ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளா் குறைகேட்பு

அறுபதாயிரம் வாக்குகளும்... அமைச்சா் பதவியும்...

அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்: எஸ்.பி.வேலுமணி

அத்திக்கடவு- அவிநாசி 2-ஆம் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக பேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


