கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளா் குறைகேட்பு

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

News image

ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்த அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:30 pm

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் உள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை வாக்கு சேகரித்தாா். பின்னா், சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியம், மோகனூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்களை வரவழைத்து அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்ததுடன், வெற்றி பெற்றதும் உடனடியாக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, வளையப்பட்டி, கல்குறிச்சி, தாண்டாகவுண்டனூா், மலைவேப்பன்குட்டை, பள்ளிப்பட்டி, துத்திக்குளம், புலவக்கல்பாளையம், காந்திநகா், குட்டரங்கம்பட்டி, புலவா்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின்போது சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.