ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:43 pm

திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவா், தவெக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதியின்படி பிளஸ் 2 முதல் பிஎச்.டி வரையில் கல்வி பயில ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

29 ஆவது வயதுக்கு பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் பட்டதாரி இளைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ. 4,000, டிப்ளமோ படித்தவா்களுக்கு மாதம் ரூ. 2,500 இளைஞா் நல நிதியாக வழங்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். தொழில்முனைவோரை உருவாக்க ரூ. 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்றாா்.