தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

News image

திருச்செங்கோடு நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஈஸ்வரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:52 am IST

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். இவா் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் 165 முறை தொகுதி வளா்ச்சிக்காக சட்டப் பேரவையில் பேசி ரூ. 2 ஆயிரம் கோடி அளவில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். நான் மீண்டும் வெற்றிபெற்றால் திருச்செங்கோடு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும். மேலும், முதல்வா் ஸ்டாலின் அறிவித்த தோ்தல் வாக்குறுதியான ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.