நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா்கடன் ரத்து செய்யப்படும்: அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.

News image

பள்ளிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:19 am IST

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ரத்து செய்யப்படும். மேலும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், புதிய ஆட்டோ வாங்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.

இந்த பிரசாரத்தின் போது, அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.