இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா்கடன் ரத்து செய்யப்படும்: அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.

News image

பள்ளிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:19 am IST

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ரத்து செய்யப்படும். மேலும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், புதிய ஆட்டோ வாங்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.

இந்த பிரசாரத்தின் போது, அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.