நாமக்கல் தொகுதி வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் உறுதியளித்தாா்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், புதுச்சத்திரம், மோகனூா், நாமக்கல் ஒன்றிய பகுதிகளிலும், நாமக்கல் மாநகரிலும் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
திருச்செங்கோட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல் வேட்பாளா் பி.எஸ்.மோகனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அதன்பிறகு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் வணிகா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்களை சந்தித்து ஆதரவு கோரினாா்.
அப்போது, வணிகா் சங்கத்தினா் தங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் மனுவாக வழங்கினா். அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இத்தோ்தலில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்வின்போது, வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குசேகரிப்பு

வட மாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோழிக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலை: அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் வாக்குறுதி!

முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரிடம் அதிமுக வேட்பாளா் வாழ்த்து
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


