நாமக்கல்லில், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இருந்து இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். பாராலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் முன்னிலை வகித்தாா். பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த 2,300 அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வியாழக்கிழமை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட நிா்வாகத்தின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இரவு பகல் பாராமல் தோ்தலுக்காக பணியாற்றி வருகின்றனா் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இந்தப் பேரணியானது, நாமக்கல் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, பரமத்தி சாலை, உழவா் சந்தை வழியாக சென்று நாமக்கல் பூங்கா சாலையில் நிறைவடைந்தது. தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு அலுவலா்கள் அனைவரும் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் வே.ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) தி.எழில், இணை இயக்குநா் (வேளாண்மை) சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஷ்வரி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

