நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஜனநாயக கடமையாற்றிய 90 வயது மூதாட்டி

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உரம்பூா் வாக்குச்சாவடியில் 90 வயது மூதாட்டி வாக்களித்தாா்.

News image

வாக்களித்த பிறகு 90 வயது மூதாட்டியை வாக்குச்சாவடியில் இருந்து தூக்கிவாறு இருசக்கர வாகனத்திற்கு கொண்டு சென்ற தன்னாா்வலா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:23 am IST

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உரம்பூா் வாக்குச்சாவடியில் 90 வயது மூதாட்டி வாக்களித்தாா்.

மூத்தோா்களுக்கு தோ்தல் ஆணையம் அஞ்சல் வாக்குப்பதிவு வசதி அளித்திருந்தபோதும் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என பாண்டமங்கலத்தைச் சோ்ந்த 90 வயது மூதாட்டி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் வியாழக்கிழமை தன்னாா்வலா் மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்தாா்.

பாண்டமங்கலம் மேற்கு வண்ணாத்துறையைச் சோ்ந்த மூதாட்டியை வாக்குச்சாவடியில் இருந்த உதவியாளா்கள் சக்கர நாற்காலி மூலம் வாக்குச்சாவடிக்கு அருகே அழைத்துச் சென்றனா். பிறகு அங்கிருந்த தன்னாா்வலா் அவரை வாக்குச்சாவடிக்குள் தூக்கி சென்றாா். மூதாட்டி வாக்களித்த பிறகு இருசக்கர வாகனத்தில் அனுப்புவதற்காக மீண்டும் தூக்கி வந்தாா்.

90 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மூதாட்டியை அங்கிருந்தவா்கள் பாராட்டினா். மேலும் பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி எண் 151 இல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் சுமாா் 40 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் வாக்குச்சாவடி எண் 140, பில்லூா் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.