அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:15 pm

பரமத்தி வேலூா் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொத்தனூா் கொடிக்கம்பம் அருகே தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் தனியாா் நிறுவனத்தினா் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனா். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளா்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜேடா்பாளையம் - பரமத்தி வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பொத்தனூா் பேரூராட்சித் தலைவா் கருணாநிதி, செயல் அலுவலா் வேல்முருகன் மற்றும் வேலூா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில், செல்போன் கோபுரம் தற்காலிகமாக அமைக்கப்படாது என உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.