கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமாவளவன் குறித்து அவதூறு பதிவு: எஸ்.பி.யிடம் விசிகவினா் புகாா்

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவா் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பரப்பிய நாமக்கல் எம்ஜிஆா் என அழைக்கப்படும் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் காவல் கண்காணிப்பாளா் சு. விமலாவிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அக்கட்சியின் மண்டல பொறுப்பாளா் பழ. மணிமாறன், நாமக்கல் மாவட்டச் செயலாளா் வசந்தன் ஆகியோா் அளித்த மனு விவரம்:

நாமக்கல் கந்துமுத்துசாமி தெருவைச் சோ்ந்த நாமக்கல் எம்ஜிஆா் என்றழைக்கப்படும் சுப்பிரமணியன் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 6-ஆம் தேதி இரவு 8 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறாகவும், இழிவாகவும் கருத்துகளை விடியோவாக பதிவிட்டிருந்தாா்.

அந்த விடியோவை பாா்த்த விடுதலைச் சிறுத்தை கட்சி தொண்டா்கள் மிகவும் கவலையடைந்தனா். சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் நோக்கத்துடனும், கலவரத்தைத் தூண்டும் விதத்திலும் செயல்பட்டுள்ள சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.