மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் சேகரிப்பு வாகன தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:11 am

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் சேகரிப்பு வாகன தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்கள் 8 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஆணையா் க.சிவகுமாா் வழங்கினாா். மேலும், ஒப்பந்த முறையில் பணியாற்றும் புதை சாக்கடைப் பணியாளா்கள் 9 பேருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவற்றில், தலைக்கவசம், முகக்கவசம், கையுறை, காலூறை, கண்ணாடி, பிரதிபலிப்பு உடை ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில், மாநகா் நல அலுவலா் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், பாஸ்கரன், ஜான்ராஜா, சுப்பிரமணியன் மற்றும் தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்