எருமப்பட்டி அருகே பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில், பாா்வையாளா்கள், வீரா்கள் உள்பட 52 போ் காயமடைந்தனா்.
பொங்கல் பண்டிகையை தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, எருமப்பட்டி பொன்னேரி, சாலப்பாளையம், குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், பவித்திரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எருமப்பட்டி அட்மா குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி ஆகியோா் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தனா். நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. நாமக்கல், துறையூா், எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றதில் 31 மாடுபிடி வீரா்களும், 19 காளை உரிமையாளா்களும், பாா்வையாளா்கள் 2 போ் என மொத்தம் 52 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.
தொடர்புடையது

என்.புதூரில் மஞ்சுவிரட்டு: 48 போ் காயம்

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


