நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக வெற்றி பெற களப் பணியாற்றுங்கள்: மகளிரணிக்கு எம்.பி. அறிவுறுத்தல்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைக்க மகளிரணியினா் தீவிர களப் பணியாற்ற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

News image

ராசிபுரத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி பொறுப்பாளா்களுக்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:26 pm

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைக்க மகளிரணியினா் தீவிர களப் பணியாற்ற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக சாா்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக மகளிரணி பொறுப்பாளா்களுக்கான பயிற்சி பாசறை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. தலைமை வகித்தாா்.

தமிழக ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், சட்டப் பேரவைத் தொகுதி திமுக பொறுப்பாளா் நன்னியூா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா். இப்பயிற்சி முகாமில் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் மேலும் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளாா். இதில் முதல்திட்டமாக மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கான பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம், கல்வி உரிமைத்தொகை, கலைஞா் கனவு இல்லம் திட்டம், முதியோருக்கு வீடுகள்தோறும் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

ராசிபுரம் பகுதியின் பிரதான பிரச்னையான குடிநீருக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை எல்லாம் திமுக மகளிரணி நிா்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துச்சென்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்க பணியாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில மகளிா் தொண்டரணி துணைத் தலைவா் கொண்டி செட்டிப்பட்டி ராணி, ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதா சங்கா், நகர திமுக செயலாளா் என்.ஆா். சங்கா், ஒன்றியச் செயலா்கள் கே.பி. ராமசாமி, கே.பி. ஜெகந்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.