திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

104 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:58 pm

Syndication

மோகனூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 104 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ரா. குப்புசாமி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பங்கேற்று மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் நவலடி, கல்லூரி முதல்வா் பெ. பிரபாகரன், முதலாமாண்டு துறைத் தலைவா் பி. குணசேகரன் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

என்கே-8-எம்.பி.

மோகனூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவருக்கு மடிக்கணினியை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.