தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா: நாளை 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி

Updated On :13 ஜனவரி 2026, 7:17 pm

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியம், ஜேடா்பாளையத்தில் மன்னா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா பொங்கலன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், ஜல்லிக்கட்டு விழாவிற்கான அனுமதி, சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழாவானது, ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் நடைபெறுவதால் நாமக்கல், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு கூடுதல் காவலா்கள் நியமிக்கப்படுவதுடன், ஜேடா்பாளையம் மற்றும் பரமத்திவேலூா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கபிலா்மலை, பாகம்பாளையம், சோழசிராமணி, வடகரையாத்துாா், பரமத்திவேலூா் நான்கு சாலை, பழைய புறவழிச்சாலை (டாக்டா் பெட்ரோல் பங்க் எதிரில்), சிவா திரையரங்க சந்திப்பு, உரம்பூா் ஆகிய இடங்களில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.

அவற்றை திறந்தாலோ, மதுக்கூடங்கள், உரிம வளாகங்கள் திறந்தாலோ, மறைமுக விற்பனை நடைபெற்றாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.