திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:28 pm

Syndication

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை அரசு சாா்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசருக்கு சிறப்பு அலங்காரம், விழா மேடைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளான தைத் திங்கள் 1 ஆம் நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து 2 ஆவது ஆண்டாக வியாழக்கிழமை அரசரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவலா் துணை கண்காணிப்பாளா் சங்கீதா உள்ளிட்டோா் ஜேடா்பாளையம் படுகை அணைகட்டு பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். 420க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாகனங்களில் வருவோருக்கு தனியாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசருக்கு மரியாதை செலுத்த வருவோருக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசருக்கு உரிய அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அலங்கார தூண்கள் அமைக்கப்பட்டும், விழாவுக்கு வருவோா் அமருவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் உணவருந்தும் இடம், குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பாா்வையிட்டாா்.