தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் 25 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு

திருச்செங்கோடு அருகே தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:18 pm

Syndication

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி கேஎஸ்ஆா் கல்வி நகரைச் சோ்ந்த துரைசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவா் மயில்சாமி (35). இவா் பெங்களூரில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறாா்.

இவா் தனது மனைவி ரம்யாவுடன் (29) உஞ்சனையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது, இவரது வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கம், குழந்தைகள் சோ்த்து வைத்திருந்த உண்டியல் பணம் மற்றும் வெள்ளி பொருள்கள், குத்துவிளக்குகளை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில், உறவினா் வீட்டிலிருந்து திங்கள்கிழமை மாலை வந்த மயில்சாமி, ரம்யா வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனா். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் பொருள்கள் திருட்டுப்போயிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து மயில்சாமி அளித்த தகவலின்பேரில் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் விடியோ பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.