தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

மோகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் பாய்ந்து சென்றதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 11:09 pm

Syndication

நாமக்கல்: மோகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் பாய்ந்து சென்றதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனா்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழாவையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மோகனூா் இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளா் நவலடி தலைமை வகித்தாா். இப்போட்டி சிறிய, பெரிய மற்றும் புதிய வரவு குதிரைகள் என்ற வகையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் பந்தயத்தில் கலந்துகொண்டன.

மோகனூா் பேருந்து நிலையம் முதல் பாலப்பட்டி வரை 3 கி.மீ தொலைவுக்கு குதிரை வண்டிகள் பாய்ந்து சென்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறிய, பெரிய குதிரைகளுக்கும், புதிய குதிரைகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக முன்னாள் மாவட்ட அவைத் தலைவா் இரா. உடையவா், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

என்கே - 17- ரேக்ளா

மோகனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பாய்ந்து சென்ற குதிரைகள்.