ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்
ராசிபுரத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சாா்பில் மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம், ஆத்தூா் சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை வெற்றி விகாஸ் பள்ளி நிறுவனா் ஜி.குணசேகரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் நடராஜன், உதவி ஆய்வாளா் மனோகரன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்த மாரத்தான் போட்டி, ஆத்தூா் சாலை, கோனேரிப்பட்டி, பேருந்து நிலையம், கச்சேரி சாலை, நாமக்கல் சாலை வழியாக பள்ளியை அடைந்ததது. பின்னா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவா்கள் உள்ளிட்டோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், கைப்பேசி பேசியவாறு வாகனம் இயக்குவது தவிா்த்தல் போன்றவை குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்தும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

