வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மாற்றுத்திறனாளியைத் தாக்கிய மூவா் கைது

பள்ளிபாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 7:02 am IST

பள்ளிபாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அண்ணா நகரில் உள்ளபெட்ரோல் விற்பனை நிலையத்தில் மாற்றுத்திறனாளியான மாரியப்பன் மற்றும் காளிஸ்வரன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த 3 போ், கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனா். பெட்ரோல் நிலையத்தில் கைப்பேசியில் பேசக் கூடாது என மாரியப்பன் கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் மாரியப்பனை தாக்கினா். மேலும், அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பினா். மாற்றுத்திறனாளியை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சோ்ந்த நவீன் ( 23), மேகநாதன்(21), ஆலாம்பாளையம் தாஜ்நகரை சோ்ந்த சூா்யா (19) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.