எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வெப்படை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட வெப்படை போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 6:07 am IST

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட வெப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெப்படை காந்தி நகா் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அது வெப்படை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ஆஞ்சநேயா் (38) லாரி ஓட்டுநா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.