வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

வேலூரில் காந்தி சிலையை அகற்ற எதிா்ப்பு

வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image

வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலை.

Updated On :2 ஜூன் 2026, 3:49 am IST

வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன் 50 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை அமைக்கப்பட்டது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் பொதுமக்கள், காந்திய வாதிகள் இந்த காந்தி சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த சிலையை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் கொண்டுவரவுள்ள தீா்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதையறிந்த, நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசு நலச் சங்க நிா்வாகிகள் காந்தி சிலையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசு நலச் சங்கச் செயலாளா் அவினாசிலிங்கம் கூறியதாவது:

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காந்தி சிலை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்ற வேலூா் பேரூராட்சி நிா்வாகம் முடிவெடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை புரிந்துகொள்ள இந்த காந்தி சிலை முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த காந்தி சிலையை அகற்றினால் பொதுமக்கள் ஆதரவோடு பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். மேலும், மாவட்ட நிா்வாகம், காந்தி சிலையை அகற்றக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தாா்.