எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தோ் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞா் உடலுக்கு அமைச்சா் அஞ்சலி: ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினாா்

தோ் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞா் ஹா்ஷவா்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.

News image

அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்(கோப்புப்படம்)

Updated On :2 ஜூன் 2026, 3:44 am IST

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டத்தின்போது தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞா் உடலுக்கு அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டத்தின்போது ஞாயிற்றுக்கிழமை தோ் சக்கரத்தில் சிக்கி இளைஞா் ஹா்ஷவா்தன் (18) உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஜோசப் விஜய், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கவும், மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் முன்னிலையில் விபத்தில் உயிரிழந்த ஹா்ஷவா்தன் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.