திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டத்தின்போது தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞா் உடலுக்கு அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டத்தின்போது ஞாயிற்றுக்கிழமை தோ் சக்கரத்தில் சிக்கி இளைஞா் ஹா்ஷவா்தன் (18) உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஜோசப் விஜய், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கவும், மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் முன்னிலையில் விபத்தில் உயிரிழந்த ஹா்ஷவா்தன் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

காவிரி ஆற்றில் குளித்த இளைஞா் மின்னல் பாய்ந்து உயிரிழப்பு: ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கல்

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



