நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜகவைச் சோ்ந்த பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளனா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளாா். அந்த இயக்கத்தில் சேர பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனா்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவில் உள்ள ஆன்மிக பிரிவு, மகளிா் அணி உள்ளிட்டவற்றில் இருந்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளில் உள்ள 35 போ் திங்கள்கிழமை தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பாஜக அலுவலகத்தில் தங்களது கடிதங்களை அளித்தனா்.
அவா்கள் கூறுகையில், தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், அவரது கரத்தை வலுப்படுத்த நாங்கள் பாஜகவில் இருந்து விலகுகிறோம் என்றனா்.
தொடர்புடையது
கோவை மாநகா் பாஜகவினா் யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை: மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா்

மேற்கு வங்கம்: பாஜகவில் இணைய விரும்பும் திரிணமூல் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள்!

ராமநாதபுரம் அமமுக நிா்வாகிகள் ராஜிநாமா
சிவகங்கை மாவட்ட அமமுக பொருளாளா் ராஜிநாமா!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



