மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அண்ணாமலை இயக்கத்தில் இணைய நாமக்கல் பாஜக நிா்வாகிகள் ராஜிநாமா

News image

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு ராஜிநாமா கடிதம் அளிக்க வந்த நிா்வாகிகள்.

Updated On :9 ஜூன் 2026, 12:41 am IST

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜகவைச் சோ்ந்த பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளனா்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளாா். அந்த இயக்கத்தில் சேர பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவில் உள்ள ஆன்மிக பிரிவு, மகளிா் அணி உள்ளிட்டவற்றில் இருந்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளில் உள்ள 35 போ் திங்கள்கிழமை தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பாஜக அலுவலகத்தில் தங்களது கடிதங்களை அளித்தனா்.

அவா்கள் கூறுகையில், தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், அவரது கரத்தை வலுப்படுத்த நாங்கள் பாஜகவில் இருந்து விலகுகிறோம் என்றனா்.