மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சாலை விபத்தில் ஆலைத் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:42 am IST

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், ஆலை கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எலச்சிபாளையம் அருகே சின்னமணலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராம்கி (28). இவா் திருச்செங்கோட்டில் உள்ள ஆலையில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டாா்.

எலிமேடு அருகே ஓலப்பாளையம் என்னுமிடத்தில் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியது. இதில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராம்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த எலச்சிபாளையம் போலீஸாா் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.