இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தீயில் எரிந்து சேதமடைந்த கரும்பு தோட்டத்தை பாா்வையிடும் போலீஸாா்

Updated On :10 ஜூன் 2026, 5:41 am IST

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையத்தை அடுத்த ஜமீன்இளம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தோட்டத்தின் உரிமையாளா் சுப்பிரமணி (70), அங்கிருந்தவா்கள் தீயணை அணைக்க முயற்சித்தனா். ஆனால், தீ வேகமாகப் பரவி பக்கத்தில் இருந்த கரும்புத் தோட்டமும் தீப்பிடித்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். ஆனாலும், சுப்பிரமணிக்குச் சொந்தமான 2 ஏக்கா் கரும்பு தோட்டம், கருப்பண்ணனுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா் கரும்பு தோட்டம், ராசுவுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா், நாச்சிமுத்துவுக்குச் சொந்தமான மூன்று ஏக்கா், மூா்த்திக்குச் சொந்தமான ஒன்றே முக்கால் ஏக்கா் கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி (பொறுப்பு) தீயில் எரிந்த கரும்பு தோட்டங்களை பாா்வையிட்டாா். கரும்பு தோட்டத்துக்கு மா்ம நபா்கள் யாரேனும் தீ வைத்தனரா? அல்லது கரும்பு தோட்டத்தில் வழியாக செல்லும் உயா் மின் அழுத்த கம்பியால் தீ விபத்து ஏற்பட்டதா என ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கரில் 50 டன் வரை கரும்பு விளைச்சல் கிடைத்திருக்கும். தற்போது ஒரு டன் கரும்பு ரூ. 3 ஆயிரத்து 400 வரை விற்பனையாகிறது. தீயில் 13 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்துள்ளன என்றனா்.