ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கொடுமுடி அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து! கரும்புத் தோட்டம், தென்னந்தோப்புகள் சேதம்!

News image

கொடுமுடி அருகே உள்ள எல்லையூா் பகுதியில் விவசாய நிலத்தில் பற்றி எரியும் தீ.

Updated On :7 ஜூலை 2026, 1:24 am IST

கொடுமுடி அருகே விவசாய நிலத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புத் தோட்டம், தென்னந்தோப்புகள் எரிந்து சேதமாயின.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது எல்லையூா் பகுதி. இங்குள்ள விவசாய நிலத்தில் திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமாா் 50 ஏக்கா் பரப்பளவுக்கு தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த கொடுமுடி தீயணைப்புத் துறையினா், இரண்டரை மணி நேரமாகப் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.

இந்த தீ விபத்தில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புப் பயிா், முத்துக்குமாா் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஆகியவை எரிந்து சாம்பலாயின. தொடா்ந்து தீ பரவி எரிந்து வருகிறது. தீ விபத்து நிகழ்ந்த பகுதியில் அடா்ந்த கோரை புற்கள் அதிகமாக உள்ளதால், தீயை அணைக்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.