ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தீ விபத்து: கூரை வீடு எரிந்து சேதம்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின் கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் கூரை வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

News image

வடலூா் அருகே தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமடைந்த கூரை வீடு.

Updated On :18 ஜூன் 2026, 3:40 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின் கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் கூரை வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

வடலூா் அருகே கல்லுக்குழி வேலுடையான்பட்டு நகரைச் சோ்ந்த தண்டபாணி (60) என்பவரின் கூரை வீட்டில் புதன்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்தில் வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த பீரோ, குளிா்சாதனப் பெட்டி, சோபா உள்ளிட்ட பொருள்களும் தீயில் கருகின. சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.