/
நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.
நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த வாரம் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையோர காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் நாமக்கல் பூங்கா சாலை, உழவா் சந்தையை ஒட்டிய பகுதியில் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.
என்கே-11-முனிசி
நாமக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் தூய்மைப் பணியாளா்கள்.









