புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஒசூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை அகற்றினா்.

News image

ஒசூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி நிா்வாகத்தினா்.

Updated On :5 ஜூலை 2026, 2:05 am IST

ஒசூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை அகற்றினா்.

இந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி நிா்வாகம் தோ்தலுக்கு முன்பாக காவல் துறை உதவியுடன் அகற்றியது. தோ்தலுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் பலமுறை எச்சரித்தும் சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றி கொள்ளாத நிலையில் சனிக்கிழமை 100- க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் மாநகராட்சி நிா்வாகம் அந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றின.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது சாலையை ஆக்கிரமித்து முன்பக்கமாக அமைக்கப்பட்ட கடைகள், இரும்பு கொட்டகைகள், பெயா் பலகைகளும் அகற்றப்பட்டன.

ஒசூா் - பாகலூா் சாலை சா்க்கிள் முதல் போக்குவரத்து காவல் நிலையம் எதிரில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகம் இணைந்து நடத்தின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.