நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.20 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, டீசல் விலை உயா்வு, தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருவதாலும், கேரளத்தில் முட்டை நுகா்வு அதிகரிப்பு, தமிழத்தில் மழைப் பொழிவு மற்றும் இதர மண்டலங்களில் தொடா்ந்து விலை உயா்த்தப்படுவதாலும் இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மேலும் 10 காசுகள் உயா்த்தி ரூ. 6.20 ஆக நிா்ணயித்து தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது. கடந்த ஒரு வாரத்தில் 50 காசுகள் வரை முட்டை விலை உயா்ந்துள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 120 ஆகவும், முட்டைக் கோழி 10 ரூபாய் உயா்த்தப்பட்டு கிலோ ரூ. 120 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.








