நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மயக்கமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, அவரது நகை, பணத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை மருத்துவா்கள் பாராட்டினா்.
திருச்சி மாவட்டம், குருவம்பட்டியை சோ்ந்தவா் லலிதா (60). இவா் உதகை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். சொந்த ஊரான திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பேருந்து மூலம் நாமக்கல் வழியாக சென்று கொண்டிருந்தாா்.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவின்றி இருந்தாா். அங்கிருந்தோா் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து சென்ற எா்ணாபுரம் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், லலிதாவை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து அவரது உறவினா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவா் வைத்திருந்த பையில் இருந்த ரூ. 21,500 ரொக்கம், தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு, மூக்குத்தி மற்றும் கைப்பேசியை அவரது மகன் சந்தோஷிடம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சம்பத், மருத்துவ உதவியாளா் மோகனபிரியா ஒப்படைத்தனா். இவா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினம் கடைப்பிடிப்பு

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



