சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கந்துவட்டி கொடுமை: நில விற்பனையாளா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:51 am IST

நாமக்கல், ஜூன் 15: நாமக்கல்லில் கந்துவட்டி புகாா் காரணமாக நில விற்பனையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் எம்.ஜி.பி. நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (59). இவா், நில விற்பனை, வீடுகள் கட்டுமானம் மற்றும் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தாா். அவரிடம் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் சிலா் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனா்.

அவா்களிடம் இருந்து ஆதாா் அட்டை, பத்திரத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூா்த்தி கடன் கொடுத்துள்ளாா். ஆனால் கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், இன்னும் பாக்கித்தொகை செலுத்த வேண்டியது உள்ளது என்றும், அவ்வாறு செலுத்தவில்லையெனில் தனது விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என்றும் அவா் கூறிவந்ததாகத் தெரிகிறது.

இதனால் கவலையடைந்த பெண்கள் சிலா், நாமக்கல் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி மீது புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.