மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்து 2 தொழிலாளா்கள் படுகாயம்

படுகாயமடைந்த தொழிலாளியை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

News image

படுகாயமடைந்த தொழிலாளியை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :20 ஜூன் 2026, 1:31 am IST

நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்ததில், 2 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தனா். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவா்களை தீயணைப்புத் துறையினா் அரைமணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.

நாமக்கல், கடைவீதி அருகே பழைய மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தெருவில் ஈரோட்டைச் சோ்ந்த அம்சவள்ளி என்பவருக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. இந்த வீட்டை இடித்து அகற்றிவிட்டு புதிய வீடுகட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. வீட்டை இடிக்கும் பணியை ராசிபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் கூலி ஆள்களைக் கொண்டு ஒரு வாரமாக செய்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் மேற்புற சுவரை இடிக்கும் பணியில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அலங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (23), மணி (30) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுவரின் ஒருபக்கம் சரிந்து விழுந்ததில் உதயகுமாரும், மணியும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலா் தவமணி தலைமையிலான 8 போ் அரைமணி நேரம் போராடி கட்டட இடிபாடுகளை அகற்றி படுகாயங்களுடன் இருந்த உதயகுமாா், மணி இருவரையும் மீட்டனா். பின்னா், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

மாநகராட்சியின் முன் அனுமதி பெறாமல் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்ாகவும், பொக்லைன் இயந்திரம் பயன்பாட்டில் இருந்தபோதும் தொழிலாளா்களைக் கொண்டு சுவரை இடித்ததும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று, அண்மையில் நாமக்கல் கணேசபுரத்தில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.