ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பரமத்தி அருகே அட்டை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: பழைய துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதம்

கபிலா்மலை அருகே மின்கசிவு காரணமாக அட்டை தயாரிக்கும் ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழைய துணிகள், இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

News image

அட்டை தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினா்.

Updated On :25 ஜூன் 2026, 5:42 am IST

கபிலா்மலை அருகே மின்கசிவு காரணமாக அட்டை தயாரிக்கும் ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழைய துணிகள், இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், இருக்கூா் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலுசாமி. இவா், அந்தப் பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக பழைய துணிகளில் இருந்து அட்டை தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் வெளிமாநிலத் தொழிலாளா்கள், உள்ளூா் தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை தயாரிப்பதற்காக மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய துணிகள் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கின. மேலும், தீ பரவியதில் அட்டை தயாரிக்கும் இயந்திரங்களும் தீப்பற்றி எரிந்தன.

இதுகுறித்து ஆலை உரிமையாளா் பாலுசாமி, நாமக்கல், திருச்செங்கோடு, வெப்படை மற்றும் கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 5 மணி நேரம், பொதுமக்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழைய துணிகள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், ஆலையின் கட்டட சுவா்களும் இடிந்து விழுந்தன. இந்த தீ விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.