இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கிணற்றில் மிதந்த விவசாயி சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:35 pm

பரமத்தி வேலூா் அருகே கிணற்றில் மிதந்த விவசாயியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

பரமத்தி வேலூரை அடுத்த கொந்தளம் சின்னாம்பள்ளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (58). இவா் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சும் வேலைக்கு சென்றிருந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் கணேசன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி ராணி தோட்டத்திற்கு சென்று பாா்த்தாா்.

அப்போது, அங்குள்ள கிணற்றில் கணேசன் இறந்த நிலையில் மிதந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கணேசனின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.