இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய வழித்தடத்தில் 7 பேருந்துகளை இயக்க முதல்வா் அனுமதி: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடத்தில் 7 பேருந்துகளை இயக்க முதல்வா் அனுமதி அளித்ததற்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடத்தில் 7 பேருந்துகளை இயக்க முதல்வா் அனுமதி அளித்ததற்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 7 புதிய பேருந்துகளை இயக்குவதற்கும் மற்றும் வழித்தடங்களை நீட்டிப்பு செய்வதற்கும் தமிழக முதல்வா் அனுமதி அளித்துள்ளாா். அவருக்கும், துணை முதல்வா், போக்குவரத்து துறை அமைச்சா் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புதிய பேருந்துகள் கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்துக்கு காலை மற்றும் மாலை வேளையிலும், படத்தையான்குட்டை கிராமத்துக்கு காலை மற்றும் மாலை வேளையிலும், மோகனூரில் இருந்து கோவைக்கு காலை வேளையிலும் இயக்கப்படுகின்றன.

மோகனூா் ஒன்றியம், பரளியில் இருந்து அணியாபுரத்துக்கு காலை வேளையிலும், லத்துவாடி கிராமத்துக்கு காலை, மதியம், மாலை வேளைகளிலும் நாமக்கல், பொம்மைக்குட்டைமேடு, தாளம்பாடி, அல்லாளபுரம், பொம்மம்பட்டி, புத்தூா், வேலகவுண்டம்பட்டிவரை மதிய வேளையிலும், வளையப்பட்டி, ஈச்சவாரி, கோணங்கிப்பட்டி, எருமப்பட்டி, முட்டாஞ்செட்டி வழியாக வரதராஜயுரம்வரை மதியம் மற்றும் மாலை வேளைகளிலும் இயக்கப்படுகின்றன.

எனவே, இந்த பேருந்து சேவையை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.