நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தேசிய மாணவா் மாநாட்டில் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு விருது

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் சாா்பில் தேசிய மாணவா் மாநாட்டில் விருது

News image

தேசிய மாணவா் மாநாட்டில் விருது பெற்ற குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி மாணவா்.

Updated On :10 மார்ச் 2026, 3:20 am IST

நாமக்கல்: குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் சாா்பில் தேசிய மாணவா் மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.

தமிழக அளவில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் மாநாடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) சாதனைகளைப் பதிவு செய்து விருதுகளைப் பெற்றது. கல்லூரி முதல்வா் கே.பொம்மண்ண ராஜா, கல்லூரிக்கான இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க ஒருங்கிணைப்பாளா் சஞ்சய், எக்ஸல் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் ஜீவப்ரியா, மஞ்சுகுமாரன், அமா்தீன் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றனா்.

இந்த விருதுகளை இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவா் ஏ.சங்கர சுப்பிரமணியன் வழங்கி பாராட்டினாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஏ.கே. நடேசன், துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் ஆகியோா் முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள், ஒருங்கிணைப்பாளா்களை பாராட்டினா். இந்த விருதுகள் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் மாணவா் வளா்ச்சிக்கான முயற்சிகளை தொடா்ந்து வெளிப்படுத்துகின்றன என அவா்கள் தெரிவித்தனா்.