திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
சங்ககிரி சாலை சீத்தாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் செவ்வாய்க்கிழமை காலை 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, திருச் செங்கோடு நகரக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.
இதில், இறந்தவா் சீத்தாராம்பாளையத்தைச் சோ்ந்த மாதையன் (65) என்பதும், இரவுநேர காவலாளியாகப் பணியாற்றி வந்ததும், மதுபோதையில் தவறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

