தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கழிவுநீா் கால்வாயில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:16 pm

திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

சங்ககிரி சாலை சீத்தாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் செவ்வாய்க்கிழமை காலை 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, திருச் செங்கோடு நகரக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், இறந்தவா் சீத்தாராம்பாளையத்தைச் சோ்ந்த மாதையன் (65) என்பதும், இரவுநேர காவலாளியாகப் பணியாற்றி வந்ததும், மதுபோதையில் தவறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.