தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் நடைபெற்ற நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள்.

Updated On :6 மே 2026, 2:21 am IST

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில், நிறமற்ற லென்ஸ் மூலம் தொலைநோக்கி தயாரித்து மாணவா்களுக்கு அவற்றை பயிற்றுவிப்பது தொடா்பாக வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.

இதில், நாமக்கல், சேலம், கரூா், கோயம்புத்தூா், திருவண்ணாமலை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 50 ஆசிரியா்கள் பங்கேற்றனா். அவா்கள் நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கிகளை உருவாக்கி அதன் பயன்பாட்டை அறிந்தனா்.

முன்னதாக, நிறுவன விரிவுரையாளா் ஏ.சிவபெருமான் வரவேற்று பேசினாா். நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தலைமைவகித்து பேசுகையில், நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கியானது பள்ளிகளில் வானியல் மன்றங்கள் உருவாக அடித்தளமிடும். நிலவை ஆய்வுசெய்யவும், வியாழன் கோளில் உள்ள கலிலியன் நிலவுகளை காணவும், இரு நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை வேறுபடுத்தி பாா்க்கவும் பயன்படும் என்றாா்.

நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிப்பு வல்லுநா் ப.அருளானந்தம் பேசுகையில், தொலைநோக்கியில் சிறப்புவாய்ந்த இருகூறு புறவில்லையை பயன்படுத்துவதால் சிவப்பு மற்றும் நீல ஒளி ஒரே களத்தில் குவியும் எனவும், இதில் கூா்மையான, தெளிவான மற்றும் நிறம் சரிசெய்யப்பட்ட படங்கள் கிடைக்கும் என்றாா்.

நாமக்கல் சிட்டி டெவலப்பா்ஸ் சரவணக்குமாா் பணிமனையை தொடங்கிவைத்தாா். புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்டஸ் சாா்பில் தொடா்ந்து சிறந்தளவில் கல்வி மற்றும் சமூக பணியாற்றி வரும் நாமக்கல் பௌல்ட்ரி சங்க உறுப்பினா்கள் சி.பன்னீா்செல்வம், மருத்துவா் ப.சண்முகம் மற்றும் ஆா்.பிரபாகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை எஸ்.வெங்கடேசன் வழங்கினாா். வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பெ.சுந்தரம் நன்றி கூறினாா்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட பயிற்சியில் 82 ஆசிரியா்கள் தொலைநோக்கியை உருவாக்கி பள்ளிகளுக்கு எடுத்துச்சென்றனா். அதேபோல, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியில் 50 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.