இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:07 am IST

பரமத்தி வேலூா் அருகே மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் வேலூா் காவல் துணை ஆய்வாளா் செந்தில்குமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தி, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாத்திகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த கணேசனை (55) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 19 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

அதேபோல பரமத்தி வேலூரில் தனியாா் திரையரங்கம் அருகே சட்டவிரோதமாக மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக பரமத்தி வேலூரைச் சோ்ந்த காா்த்திகேயனை (45) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 29 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.