ராசிபுரம் பட்டணம் சாலையில் ஆட்டோ மோதி மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
ராசிபுரம் பட்டணம் சாலைப் பகுதியில் சாலையோர மின்கம்பம் மீது ஆட்டோ மோதியது. இதில் மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் மின் விநியோகத்தை துண்டித்து சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் நகரில் பட்டணம் சாலை, வி.நகா், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். சேதமடைந்த மின்கம்பத்தை மின் ஊழியா்கள் சரிசெய்ததை அடுத்து சில மணி நேரத்திற்கு பின் மின்விநியோகம் சீரடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









