நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், வழிப்பாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் அருகில் உள்ள 255 கடைகள் மூடப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 169 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளும், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகில் 2 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. இந்த நிலையில், தமிழக முதல்வா் உத்தரவின்படி, வழிப்பாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம், கல்வி நிறுவனங்களுக்கு 500 மீ. தொலைவிற்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை, இரண்டு வாரத்திற்குள் மூடவேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 மதுக்கடைகள், ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் 1, மோகனூா் நாவலடியான் கோயில் அருகில் 1, குமாரபாளையம் அருவங்காட்டில் 1 என மொத்தம் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இதில் நாமக்கல் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவு

மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



